
தமிழாய்ந்த பெருமகனார் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம்பிள்ளை அவர்கள் கல்லூரியில்
F.A வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போதே ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார் தமக்குப் பாடமாக இருந்த ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் ஒன்றிற்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிடஎண்ணினார். ஒரு மாணவர் எழுதிய புத்தகம் என்றால் அதை வாங்க மற்றவர்கள்
தயங்குவர் என்று எண்ணிய பூரணலிங்கம் பிள்ளை PURNALINGAM என்ற தமது பெயரைத்
தலைகீழாக மாற்றி MAGNIL ANRUP என்று வைத்துக்கொண்டார். அப்பெயரைக் கண்டவர்கள்
யாரோ ஒரு பெரிய ஆங்கிலத் துரை எழுதிய புத்தகம் என்று கருதினர். அதனால் உரை நூல்ஆயிரக்கணக்கில் விற்பனையானது. கல்லூரித் தலைவராக இருந்த ஆங்கிலேயர்,"MAGNIL ANRUP துரையின்
உரை நூல் நன்றாக இருக்கிறது" என்று பாராட்டிப் பூரணலிங்கம் பிள்ளைக்கும் மற்ற
மாணவர்களுக்கும் இந்நூலைப் பயன்படுத்தி பாடம் நடத்தினார்.