MySpace Calendars
Thursday, August 25, 2011
Friday, July 8, 2011
MASTER OF ALL SUBJECTS
தமிழ்வாணன்

ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அந்தத்துறையில்
மட்டுமே அறிவு பெற்றிருப்பார்கள் ஆனால் அனைத்துத் துறை நூல்களையும்
படித்து எல்லாத் துறையிலும் வல்லவராக விளங்கிய திரு தமிழ்வாணன்
அவர்களுக்கு MASTER OF ALL SUBJECTS என்ற புதியதொரு பட்டத்தை மக்கள்
சூட்டி மகிழ்ந்தது அவரது புகழை வெளிப்படுத்துகிறது.
அவர் தொடாத துறையும் இல்லை தொட்டுத் துலங்காத துறையும் இல்லை.
TIT BITS என்னும் குறுந்தகவல்களை மக்களுக்கு எடுத்துச்
சொல்வதற்காகவே ஒரு பத்திரிகை அந்நாளிலேயே இருந்ததென்றால் அது
கல்கண்டு மட்டும்தான்.
இன்று பத்திரிகைகள் பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன ஆனால்
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கல்கண்டைத் தவிர மற்றப் பத்திரிகைகளில்
சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவைத் துணுக்குகள் இவை மட்டுமே
இடம்பெற்றிருக்கும் அந்தக் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும், கல்லூரி
மாணவர்களும் வீட்டில் உள்ள பெண்களும் பொது மக்களும் உலக
நடப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பல்துறை அறிவையும்
பெறக் காரணமாய் இருந்தவை தமிழ்வாணன் அவர்களின் எழுத்துக்கள் தான்
என்று கூறினால் அது மிகையாகாது.
இன்று கணினியும் இணையதளங்களும் தொலைக்காட்சியும் உலகத்தை
நமது வீட்டுக்குள் கொண்டு வந்து விட்ட நிலையில் தகவல்களைப் பெறுவது
சிரமமான செயல் அல்ல. ஆனால் இவையெல்லாம் இல்லாத அந்தக் கால
கட்டத்தில் பத்திரிகைகளும் வானொலியும் இருந்த போதிலும் தகவல்
பரிமாற்றம் பெருமளவில் நிகழவில்லை. வெளிநாட்டு இதழ்களையும்
அவ்வபோது வெளியாகும் சிறந்த புத்தகங்களையும் படித்து அவற்றில் உள்ள
செய்திகளைத் தமிழர்களும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கில்
அவற்றையெல்லாம் சிறு சிறு துணுக்குகளாக்கிக் கல்கண்டில் வெளியிட்டார்
. இயற்கை மருத்துவமானாலும் புதிய அறிவியல் படைப்புக்களானாலும்
உலக அரசியல் நிகழ்வுகளானாலும் சினிமா விளையாட்டு விலைவாசி
வேளாண்மை புதிய நூல்கள் இவற்றையெல்லாம் பற்றி நறுக்குத் தெறித்தாற்
போல் சின்னச் சின்ன வாக்கியங்களில் தெளிவாகப் புரியும் படி கல்கண்டில் வெளியிட்டு
வந்தார்.
மக்கள் நல்ல வண்ணம் வாழத் தேவையான ஒழுக்க நெறிகளையும் அறவியல் கருத்துகளையும் சிறு சிறுகட்டுரைகளாக வடித்துத் தந்தவர்.
மேலை நாட்டினர் போற்றிக் கொண்டாடும் கற்பனைக் கதாபாத்திரமான துப்பறியும்
ஷெர்லக் ஹோம்ஸ் போன்று தமிழர்கள் நெஞ்சில் நிலைத்திருகுகும் சங்கர்லால் என்ற
புகழ் பெற்ற கேரக்டரை உருவாக்கி உலவவிட்டவர் தமிழ்வாணன்.
இன்று தொலைக்காட்சியின் எந்தச் சேனலைத் திருப்பினாலும் மருத்துவக் குறிப்பு,அழகு குறிப்பு உளவியல் ஆலோசனை சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்று பல நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பட்ட செய்திகளையெல்லாம் அறிய கூடிய வாய்ப்பு இல்லாத நிலையில் அத்தனை செய்திகளையும்
தனி ஒருவராகத் திரட்டித் தமிழர்களுக்கு வழங்கிய பெருமைக்குரியவர் அறிஞர் தமிழ்வாணன்.
"யாரொடும் பகையிலன் எனில் போரொடுங்கும் புகழ் ஒடுங்காதால்" என்று கவிச்
சக்கரவர்த்தி கம்பர் உரைத்தபடி எல்லோருடனும் நட்பு பாராட்டி சிரித்தபடியே அனைவரையும்
சிரிக்க வைத்த நல்லவர் நாவீறு கொண்ட நல்ல தமிழ்ப் பேச்சாளர்.
இவையெல்லாம் என்னுடைய தாத்தா சேர்த்து வைத்துள்ள கல்கண்டு
தொகுப்புகளிலிருந்தும் என்னுடைய தந்தை கூறிய அனுபவங்களிலிருந்தும் நான்
அறிந்தவை சிறந்த எழுத்தாளரும் பதிப்பாளருமான தமிழ்வாணன் அவர்களின் எழுத்துப்
பணியையும், பதிப்பு பணியையும் அன்னாரது புதல்வர்கள் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களும் திரு.ரவி தமிழ்வாணன் அவர்களும் தொடர்ந்து சிறப்புற ஆற்றி வருகிறார்கள்.
என்பது தமிழுக்குப் பெருமை தமிழர்களுக்கும் பெருமை.

ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அந்தத்துறையில்
மட்டுமே அறிவு பெற்றிருப்பார்கள் ஆனால் அனைத்துத் துறை நூல்களையும்
படித்து எல்லாத் துறையிலும் வல்லவராக விளங்கிய திரு தமிழ்வாணன்
அவர்களுக்கு MASTER OF ALL SUBJECTS என்ற புதியதொரு பட்டத்தை மக்கள்
சூட்டி மகிழ்ந்தது அவரது புகழை வெளிப்படுத்துகிறது.
அவர் தொடாத துறையும் இல்லை தொட்டுத் துலங்காத துறையும் இல்லை.
TIT BITS என்னும் குறுந்தகவல்களை மக்களுக்கு எடுத்துச்
சொல்வதற்காகவே ஒரு பத்திரிகை அந்நாளிலேயே இருந்ததென்றால் அது
கல்கண்டு மட்டும்தான்.
இன்று பத்திரிகைகள் பல்வேறு தகவல்களை வெளியிடுகின்றன ஆனால்
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கல்கண்டைத் தவிர மற்றப் பத்திரிகைகளில்
சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவைத் துணுக்குகள் இவை மட்டுமே
இடம்பெற்றிருக்கும் அந்தக் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும், கல்லூரி
மாணவர்களும் வீட்டில் உள்ள பெண்களும் பொது மக்களும் உலக
நடப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பல்துறை அறிவையும்
பெறக் காரணமாய் இருந்தவை தமிழ்வாணன் அவர்களின் எழுத்துக்கள் தான்
என்று கூறினால் அது மிகையாகாது.
இன்று கணினியும் இணையதளங்களும் தொலைக்காட்சியும் உலகத்தை
நமது வீட்டுக்குள் கொண்டு வந்து விட்ட நிலையில் தகவல்களைப் பெறுவது
சிரமமான செயல் அல்ல. ஆனால் இவையெல்லாம் இல்லாத அந்தக் கால
கட்டத்தில் பத்திரிகைகளும் வானொலியும் இருந்த போதிலும் தகவல்
பரிமாற்றம் பெருமளவில் நிகழவில்லை. வெளிநாட்டு இதழ்களையும்
அவ்வபோது வெளியாகும் சிறந்த புத்தகங்களையும் படித்து அவற்றில் உள்ள
செய்திகளைத் தமிழர்களும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கில்
அவற்றையெல்லாம் சிறு சிறு துணுக்குகளாக்கிக் கல்கண்டில் வெளியிட்டார்
. இயற்கை மருத்துவமானாலும் புதிய அறிவியல் படைப்புக்களானாலும்
உலக அரசியல் நிகழ்வுகளானாலும் சினிமா விளையாட்டு விலைவாசி
வேளாண்மை புதிய நூல்கள் இவற்றையெல்லாம் பற்றி நறுக்குத் தெறித்தாற்
போல் சின்னச் சின்ன வாக்கியங்களில் தெளிவாகப் புரியும் படி கல்கண்டில் வெளியிட்டு
வந்தார்.
மக்கள் நல்ல வண்ணம் வாழத் தேவையான ஒழுக்க நெறிகளையும் அறவியல் கருத்துகளையும் சிறு சிறுகட்டுரைகளாக வடித்துத் தந்தவர்.
மேலை நாட்டினர் போற்றிக் கொண்டாடும் கற்பனைக் கதாபாத்திரமான துப்பறியும்
ஷெர்லக் ஹோம்ஸ் போன்று தமிழர்கள் நெஞ்சில் நிலைத்திருகுகும் சங்கர்லால் என்ற
புகழ் பெற்ற கேரக்டரை உருவாக்கி உலவவிட்டவர் தமிழ்வாணன்.
இன்று தொலைக்காட்சியின் எந்தச் சேனலைத் திருப்பினாலும் மருத்துவக் குறிப்பு,அழகு குறிப்பு உளவியல் ஆலோசனை சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்று பல நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பட்ட செய்திகளையெல்லாம் அறிய கூடிய வாய்ப்பு இல்லாத நிலையில் அத்தனை செய்திகளையும்
தனி ஒருவராகத் திரட்டித் தமிழர்களுக்கு வழங்கிய பெருமைக்குரியவர் அறிஞர் தமிழ்வாணன்.
"யாரொடும் பகையிலன் எனில் போரொடுங்கும் புகழ் ஒடுங்காதால்" என்று கவிச்
சக்கரவர்த்தி கம்பர் உரைத்தபடி எல்லோருடனும் நட்பு பாராட்டி சிரித்தபடியே அனைவரையும்
சிரிக்க வைத்த நல்லவர் நாவீறு கொண்ட நல்ல தமிழ்ப் பேச்சாளர்.
இவையெல்லாம் என்னுடைய தாத்தா சேர்த்து வைத்துள்ள கல்கண்டு
தொகுப்புகளிலிருந்தும் என்னுடைய தந்தை கூறிய அனுபவங்களிலிருந்தும் நான்
அறிந்தவை சிறந்த எழுத்தாளரும் பதிப்பாளருமான தமிழ்வாணன் அவர்களின் எழுத்துப்
பணியையும், பதிப்பு பணியையும் அன்னாரது புதல்வர்கள் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களும் திரு.ரவி தமிழ்வாணன் அவர்களும் தொடர்ந்து சிறப்புற ஆற்றி வருகிறார்கள்.
என்பது தமிழுக்குப் பெருமை தமிழர்களுக்கும் பெருமை.
Monday, June 27, 2011
MAGNIL ANRUP

தமிழாய்ந்த பெருமகனார் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம்பிள்ளை அவர்கள் கல்லூரியில்
F.A வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போதே ஆங்கிலத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார் தமக்குப் பாடமாக இருந்த ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் ஒன்றிற்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிடஎண்ணினார். ஒரு மாணவர் எழுதிய புத்தகம் என்றால் அதை வாங்க மற்றவர்கள்
தயங்குவர் என்று எண்ணிய பூரணலிங்கம் பிள்ளை PURNALINGAM என்ற தமது பெயரைத்
தலைகீழாக மாற்றி MAGNIL ANRUP என்று வைத்துக்கொண்டார். அப்பெயரைக் கண்டவர்கள்
யாரோ ஒரு பெரிய ஆங்கிலத் துரை எழுதிய புத்தகம் என்று கருதினர். அதனால் உரை நூல்ஆயிரக்கணக்கில் விற்பனையானது. கல்லூரித் தலைவராக இருந்த ஆங்கிலேயர்,"MAGNIL ANRUP துரையின்
உரை நூல் நன்றாக இருக்கிறது" என்று பாராட்டிப் பூரணலிங்கம் பிள்ளைக்கும் மற்ற
மாணவர்களுக்கும் இந்நூலைப் பயன்படுத்தி பாடம் நடத்தினார்.
Sunday, May 29, 2011
குஜராத் நாட்டுப்புறக் கதை
பெண் புலி
வெகு காலத்திற்கு முன், குஜராத் மாநிலத்தில், மக்கள் ஊர் விட்டு ஊர்
செல்வதற்குச் சாலைகள் மட்டுமே பயன்பட்டன. அவர்கள் பயணம்
செய்வதற்கு ஒட்டகங்களையும் சிறு வண்டிகளையும் உபயோகித்தனர்.
மாடுகள் பூட்டிய வண்டிகளும், குதிரை வண்டிகளும் புழகத்தில் இருந்தன.
இவ்வாறு பயணம் செய்து ஊர்களுக்குச் செல்வதற்கு அதிகமான காலம்
செலவானது. பயங்கரமான திருடர்களும் வழிப்பறி செய்வதுண்டு. சில
நேரங்களில் கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து பிராயணம் செய்யும்
பெண்களின் நகைகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவார்கள்.
பயணங்களின் இடையே தொல்லை தரும் கொள்ளைக்காரர்
களிடமிருந்து பிரயாணிகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று
கிராமத்துப் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பயணத்தின் போது
பாதுகாப்பாகக் கூடவே செல்வதற்குத் தொழில் முறைப் பாதுகாவலர்களை
உரிய ஊதியம் கொடுத்து நியமிக்கலாம் என்று முடிவெடுத்து அதன்படியே
பாதுகாவலர்களை நியமித்தனர். அவர்கள் திருமணக் குழுவினருடன்
பாதுகாப்பாகச் செல்வார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு
கிராமத்திற்குப் பிறந்த வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கோ அல்லது புகுந்த
வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கோ பெண்கள் செல்லும் போது அவர்களுக்குப்
பாதுகாப்பாக இந்தப் பாதுகாவலர்கள் செல்வார்கள். அதோடு கிராமத்தினர்
சொல்லும் வேலைகளையும் செய்வார்கள்.
இந்தப் பாதுகாவலர்களில் ஒருவன் ஜிமா. அவன்
அக்கிராமத்தினரிடம் நல்ல பெயரைச் சம்பாத்திருந்தான். ஜிமா மிகுந்த
பலசாலியாகவும்,துணிவுடையவனாகவம் விளங்கியதால் உள்ளூர்த்
திருடர்கள் அவன் பெயரைக் கேட்டவுடனே அஞ்சி நடுங்கி ஓடி விடுவர்.
இதனால் ஜிமாவிற்குத் தலைகனம் ஏறிவிட்டது.அவன் தனக்கு நிகர்
யாருமில்லை என்று கர்வம் கொண்டான். தன்னுடைய பெருமைக்குக்
கிராமத்தினர் ஏவும் சிறிய வேலைகளைச் செய்வது இழுக்கு என்று
கருதினான். தன் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் பெரிய வேலைகளைச்
செய்ய வேண்டுமென்று கருதினான். அவன் தன்னைப் பற்றி எல்லோரிடமும்
பெருமையாக பேசத் தொடங்கினான். “நான் யார் தெரியுமா? இந்த ஊரில்
உள்ள அனைவரையும் விட தைரியமானவன்” என்று அனைவரிடமும்
அகந்தையுடன் கூறுவான்.
ஜிமா இருந்த கிராமத்திலிருந்து பத்து கல் தொலைவிலிருந்த
மற்றொரு கிராமத்தில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் பெயர்
ரூபாலிபா அவளுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருந்தது. அவள்
தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தாள். கருவுற்றிருந்த
அவளை மாமனார் வீட்டில் சீராட்டி, உரிய சடங்குகள் செய்து அவளது
தந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர்.அவளுக்குப்
பாதுகாவலாக உடன் செல்ல ஜிமா பணி அமர்த்தப்பட்டான்.
ரூபாலிபா புத்தாடை அணிந்திருந்தாள். அவள்
உடம்பிலும் கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அலங்கரித்தன.
தந்தை வீட்டிற்கு அவள் செல்ல வேண்டிய வழி பாலைவனமாக இருந்தது.
அவ்வழியில் ஒரு சில புதர்களைத் தவிர செடி, கொடி, மரம் ஏதுமில்லை.
அந்தப் பாதை தனிமைப்படுத்தப் பட்டு அச்சம் தரும் வகையில்
அமைந்திருந்தது. எருதுகள் பூட்டிய ஒரு வண்டியில் ரூபாலிபா
ஏறிக்கொண்டாள். மற்றொரு வண்டியில் ஜிமா வர பயணம் தொடங்கியது.
இரண்டு பீப்பாய் நிறைய தண்ணீரும் கொண்டு சென்றனர்.
இருட்டத் தொடங்கியதும் ஜிமா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
வண்டிக்காரன் அவனைப் பல முறை தட்டி எழுப்பி“எழுந்திரு! எழுந்திரு!
இருட்டி விட்டது; இப்போது தூங்குவது பாதுகாப்பான செயல் அல்ல” என்று
கூறினான். பாதித் தூக்கத்திலிருந்த ஜிமா “ஏன் பயப்படுகிறாய்? நான் ஜிமா
இருக்கிறேன் என்னை மீறி எதுவும் நடந்து விடாது. நீ வாயை மூடிக்
கொண்டு வண்டியை ஓட்டு” என்று அதட்டினான்.
படுதாவிற்குப் பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த
ரூபாலிபா ஜிமாவை அழைத்து “ஜிமா தூங்காதே! நீ இப்போது விழிப்போடு
இருக்க வேண்டும் ஏனென்றால் இப்போது இருட்டாகவும் தனிமையாகவும்
இருக்கிறது” என்று கூறினாள். ஆனால் ஜிமா அதைப் பற்றிக் கவலைபடாமல்
முன்னிலும் பலமாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
திடீரென்று வண்டிக்காரன் ஜிமாவை எழுப்பி, “எழுந்திரு
ஜிமா! தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது நம்முடன் வந்துள்ள அந்தப்
பெண்ணைப் பாதுகாக்க உன்னைத் தயார் படுத்திக் கொள்” என்று கூறினான்.
ஆனால் ஜிமா குறட்டை விட்டவாறே, “நான் ஜிமா என்பதை நினைவில்
வைத்துக் கொள்” என்று கூறிக்கொண்டே தூங்கி விட்டான்.
வெளிச்சம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள்
மிகவும் அச்சமுற்று செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது கையில்
ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் திடீரென்று வந்து வண்டிகளைச்
சூழ்ந்து கொண்டார்கள் முதலில் கொள்ளைக்காரர்கள் ஜிமாவைப் பிடித்துக்
கை கால்களை ஒரு கம்பத்தில் கட்டி மணலில் தள்ளினர். அவன்
பாலைவன மணலில் உருண்டு கொண்டே சென்று ஒரு புதர் தட்டி
விழுந்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் ரூபாலிபாவிடம் சென்று அவளது
நகைகளைக் கழற்றித் தருமாறு மிரட்டினான். அவள் நகைகளை போட்டு
வைத்திருந்த பெட்டியைக் கொள்ளக்கூட்டத்தினரிடம் கொடுத்தாள் ஒரு
பெண் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்ற கூடாது என்பது திருடர்களின்
கொள்கையாக இருந்தது.ஆனால் இந்தத் திருடர் தலைவனோ, அந்த
வழக்கத்தையும் மதிக்கவில்லை. ரூபாலிபாவிடம் சென்று,
“நீ அணிந்திருக்கக்கூடிய வெள்ளிச் சிலம்பையும் நகைகளையும் கொடு”
என்று கேட்டான்.
ரூபாலிபா எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தாள். “என்னுடைய இந்தச்
சிலம்பு வலிமையான சுத்த வெள்ளியில் செய்யப்பட்டது. நான் கருவுற்று
இருப்பதால் நகைகளைக் கழற்றக் கூடிய தெம்பு என்னிடம் இல்லை. ஆனால்
நீங்கள் விரும்பினால் அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்” என்று
கூறிக்கொண்டு திரைக்கு வெளியே இரு பாதங்களையும் நீட்டினாள். இரண்டு
திருடர்கள் அவளது பாதங்களிலிருந்த சிலம்பைப் பறிக்க முயன்றனர்.
ரூபாலிபா வண்டிக்குள் சுற்றும் முற்றும் பார்த்து அங்கே கிடந்த ஒரு
கனமான கட்டையை எடுத்து இரண்டு திருடர்களின் தலையிலும் ஓங்கி
அடித்தாள். அவர்கள் மண்டை உடைந்து இறந்து போனார்கள்.
ரூபாலிபா வண்டியிலிருந்து கீழேக் குதித்துக் கையிலிருந்த
கட்டையினால் மற்றத் திருடர்களையும் சுற்றி சுழன்று அடித்தாள்.
ஒரு தைரியமுள்ள ராஜபுதனத்துப் பெண்ணைப் போல் துணிச்சலுடன்
சண்டையிட்டாள். கொள்ளைக் கூட்டத் தலைவன், அடிப்பட்ட தன்
ஆட்களை அங்கேயே விட்டு விட்டு எஞ்சியவர்களுடன் பாலைவனத்திற்குள்
ஓடி மறைந்தான். இதற்கிடையே ஜிமா தன்னுடைய கட்டுக்களை அவிழ்த்துக்
கொண்டு ரூபாலிபாவின் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு ஓடி மறைந்தான்.
ரூபாலிபா வண்டிகளை ஓட்டச் சொல்லிக்
கொள்ளைக்காரர்களிடமிருந்து பறித்த வாள்களில் ஒன்றைக் கையில்
பிடித்துக் கொண்டு வண்டிகளுக்குப் பின்னால் பாதுகாப்பாகச் சென்றாள்.
துன்பங்களை எதிர்கொண்டு வழியில் உள்ள அவளது மாமாவின் கிராமத்தை
அடைந்தாள். அவர் அவளுக்கு உடல் வலியைக் குறைப்பதற்காக கசம்பா
என்ற பானத்தை கொடுத்தார். பின்னர் ரூபாலிபா அங்கிருந்து அவளது
தந்தையின் வீட்டிற்குச் சென்றாள் அவள் மிகவும்களைப்புற்றிருந்தாள்.
சண்டையில் ஏராளமான ரத்தத்தை இழந்ததால் அவள் இறந்து போனாள்.
ரூபாலிபா என்ற அந்த இளம் பெண்ணின் தைரியத்தை
இன்றும் அந்தக் கிராமத்தினர் நினைவு கூருகின்றனர். ரூபாலிபாவையும்
கொள்ளைக்கூட்டதாருடன் சண்டையிட்ட அவளது வீரத்தையும் புகழும்
பாடல்கள் இன்றும் முழங்கி வருகின்றன.
வெகு காலத்திற்கு முன், குஜராத் மாநிலத்தில், மக்கள் ஊர் விட்டு ஊர்
செல்வதற்குச் சாலைகள் மட்டுமே பயன்பட்டன. அவர்கள் பயணம்
செய்வதற்கு ஒட்டகங்களையும் சிறு வண்டிகளையும் உபயோகித்தனர்.
மாடுகள் பூட்டிய வண்டிகளும், குதிரை வண்டிகளும் புழகத்தில் இருந்தன.
இவ்வாறு பயணம் செய்து ஊர்களுக்குச் செல்வதற்கு அதிகமான காலம்
செலவானது. பயங்கரமான திருடர்களும் வழிப்பறி செய்வதுண்டு. சில
நேரங்களில் கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து பிராயணம் செய்யும்
பெண்களின் நகைகளை அடித்துப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவார்கள்.
பயணங்களின் இடையே தொல்லை தரும் கொள்ளைக்காரர்
களிடமிருந்து பிரயாணிகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று
கிராமத்துப் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பயணத்தின் போது
பாதுகாப்பாகக் கூடவே செல்வதற்குத் தொழில் முறைப் பாதுகாவலர்களை
உரிய ஊதியம் கொடுத்து நியமிக்கலாம் என்று முடிவெடுத்து அதன்படியே
பாதுகாவலர்களை நியமித்தனர். அவர்கள் திருமணக் குழுவினருடன்
பாதுகாப்பாகச் செல்வார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு
கிராமத்திற்குப் பிறந்த வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கோ அல்லது புகுந்த
வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கோ பெண்கள் செல்லும் போது அவர்களுக்குப்
பாதுகாப்பாக இந்தப் பாதுகாவலர்கள் செல்வார்கள். அதோடு கிராமத்தினர்
சொல்லும் வேலைகளையும் செய்வார்கள்.
இந்தப் பாதுகாவலர்களில் ஒருவன் ஜிமா. அவன்
அக்கிராமத்தினரிடம் நல்ல பெயரைச் சம்பாத்திருந்தான். ஜிமா மிகுந்த
பலசாலியாகவும்,துணிவுடையவனாகவம் விளங்கியதால் உள்ளூர்த்
திருடர்கள் அவன் பெயரைக் கேட்டவுடனே அஞ்சி நடுங்கி ஓடி விடுவர்.
இதனால் ஜிமாவிற்குத் தலைகனம் ஏறிவிட்டது.அவன் தனக்கு நிகர்
யாருமில்லை என்று கர்வம் கொண்டான். தன்னுடைய பெருமைக்குக்
கிராமத்தினர் ஏவும் சிறிய வேலைகளைச் செய்வது இழுக்கு என்று
கருதினான். தன் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் பெரிய வேலைகளைச்
செய்ய வேண்டுமென்று கருதினான். அவன் தன்னைப் பற்றி எல்லோரிடமும்
பெருமையாக பேசத் தொடங்கினான். “நான் யார் தெரியுமா? இந்த ஊரில்
உள்ள அனைவரையும் விட தைரியமானவன்” என்று அனைவரிடமும்
அகந்தையுடன் கூறுவான்.
ஜிமா இருந்த கிராமத்திலிருந்து பத்து கல் தொலைவிலிருந்த
மற்றொரு கிராமத்தில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் பெயர்
ரூபாலிபா அவளுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருந்தது. அவள்
தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தாள். கருவுற்றிருந்த
அவளை மாமனார் வீட்டில் சீராட்டி, உரிய சடங்குகள் செய்து அவளது
தந்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர்.அவளுக்குப்
பாதுகாவலாக உடன் செல்ல ஜிமா பணி அமர்த்தப்பட்டான்.
ரூபாலிபா புத்தாடை அணிந்திருந்தாள். அவள்
உடம்பிலும் கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அலங்கரித்தன.
தந்தை வீட்டிற்கு அவள் செல்ல வேண்டிய வழி பாலைவனமாக இருந்தது.
அவ்வழியில் ஒரு சில புதர்களைத் தவிர செடி, கொடி, மரம் ஏதுமில்லை.
அந்தப் பாதை தனிமைப்படுத்தப் பட்டு அச்சம் தரும் வகையில்
அமைந்திருந்தது. எருதுகள் பூட்டிய ஒரு வண்டியில் ரூபாலிபா
ஏறிக்கொண்டாள். மற்றொரு வண்டியில் ஜிமா வர பயணம் தொடங்கியது.
இரண்டு பீப்பாய் நிறைய தண்ணீரும் கொண்டு சென்றனர்.
இருட்டத் தொடங்கியதும் ஜிமா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
வண்டிக்காரன் அவனைப் பல முறை தட்டி எழுப்பி“எழுந்திரு! எழுந்திரு!
இருட்டி விட்டது; இப்போது தூங்குவது பாதுகாப்பான செயல் அல்ல” என்று
கூறினான். பாதித் தூக்கத்திலிருந்த ஜிமா “ஏன் பயப்படுகிறாய்? நான் ஜிமா
இருக்கிறேன் என்னை மீறி எதுவும் நடந்து விடாது. நீ வாயை மூடிக்
கொண்டு வண்டியை ஓட்டு” என்று அதட்டினான்.
படுதாவிற்குப் பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த
ரூபாலிபா ஜிமாவை அழைத்து “ஜிமா தூங்காதே! நீ இப்போது விழிப்போடு
இருக்க வேண்டும் ஏனென்றால் இப்போது இருட்டாகவும் தனிமையாகவும்
இருக்கிறது” என்று கூறினாள். ஆனால் ஜிமா அதைப் பற்றிக் கவலைபடாமல்
முன்னிலும் பலமாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
திடீரென்று வண்டிக்காரன் ஜிமாவை எழுப்பி, “எழுந்திரு
ஜிமா! தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது நம்முடன் வந்துள்ள அந்தப்
பெண்ணைப் பாதுகாக்க உன்னைத் தயார் படுத்திக் கொள்” என்று கூறினான்.
ஆனால் ஜிமா குறட்டை விட்டவாறே, “நான் ஜிமா என்பதை நினைவில்
வைத்துக் கொள்” என்று கூறிக்கொண்டே தூங்கி விட்டான்.
வெளிச்சம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. வண்டிக்காரர்கள்
மிகவும் அச்சமுற்று செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது கையில்
ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் திடீரென்று வந்து வண்டிகளைச்
சூழ்ந்து கொண்டார்கள் முதலில் கொள்ளைக்காரர்கள் ஜிமாவைப் பிடித்துக்
கை கால்களை ஒரு கம்பத்தில் கட்டி மணலில் தள்ளினர். அவன்
பாலைவன மணலில் உருண்டு கொண்டே சென்று ஒரு புதர் தட்டி
விழுந்தான் கொள்ளைக்கூட்டத் தலைவன் ரூபாலிபாவிடம் சென்று அவளது
நகைகளைக் கழற்றித் தருமாறு மிரட்டினான். அவள் நகைகளை போட்டு
வைத்திருந்த பெட்டியைக் கொள்ளக்கூட்டத்தினரிடம் கொடுத்தாள் ஒரு
பெண் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்ற கூடாது என்பது திருடர்களின்
கொள்கையாக இருந்தது.ஆனால் இந்தத் திருடர் தலைவனோ, அந்த
வழக்கத்தையும் மதிக்கவில்லை. ரூபாலிபாவிடம் சென்று,
“நீ அணிந்திருக்கக்கூடிய வெள்ளிச் சிலம்பையும் நகைகளையும் கொடு”
என்று கேட்டான்.
ரூபாலிபா எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தாள். “என்னுடைய இந்தச்
சிலம்பு வலிமையான சுத்த வெள்ளியில் செய்யப்பட்டது. நான் கருவுற்று
இருப்பதால் நகைகளைக் கழற்றக் கூடிய தெம்பு என்னிடம் இல்லை. ஆனால்
நீங்கள் விரும்பினால் அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்” என்று
கூறிக்கொண்டு திரைக்கு வெளியே இரு பாதங்களையும் நீட்டினாள். இரண்டு
திருடர்கள் அவளது பாதங்களிலிருந்த சிலம்பைப் பறிக்க முயன்றனர்.
ரூபாலிபா வண்டிக்குள் சுற்றும் முற்றும் பார்த்து அங்கே கிடந்த ஒரு
கனமான கட்டையை எடுத்து இரண்டு திருடர்களின் தலையிலும் ஓங்கி
அடித்தாள். அவர்கள் மண்டை உடைந்து இறந்து போனார்கள்.
ரூபாலிபா வண்டியிலிருந்து கீழேக் குதித்துக் கையிலிருந்த
கட்டையினால் மற்றத் திருடர்களையும் சுற்றி சுழன்று அடித்தாள்.
ஒரு தைரியமுள்ள ராஜபுதனத்துப் பெண்ணைப் போல் துணிச்சலுடன்
சண்டையிட்டாள். கொள்ளைக் கூட்டத் தலைவன், அடிப்பட்ட தன்
ஆட்களை அங்கேயே விட்டு விட்டு எஞ்சியவர்களுடன் பாலைவனத்திற்குள்
ஓடி மறைந்தான். இதற்கிடையே ஜிமா தன்னுடைய கட்டுக்களை அவிழ்த்துக்
கொண்டு ரூபாலிபாவின் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு ஓடி மறைந்தான்.
ரூபாலிபா வண்டிகளை ஓட்டச் சொல்லிக்
கொள்ளைக்காரர்களிடமிருந்து பறித்த வாள்களில் ஒன்றைக் கையில்
பிடித்துக் கொண்டு வண்டிகளுக்குப் பின்னால் பாதுகாப்பாகச் சென்றாள்.
துன்பங்களை எதிர்கொண்டு வழியில் உள்ள அவளது மாமாவின் கிராமத்தை
அடைந்தாள். அவர் அவளுக்கு உடல் வலியைக் குறைப்பதற்காக கசம்பா
என்ற பானத்தை கொடுத்தார். பின்னர் ரூபாலிபா அங்கிருந்து அவளது
தந்தையின் வீட்டிற்குச் சென்றாள் அவள் மிகவும்களைப்புற்றிருந்தாள்.
சண்டையில் ஏராளமான ரத்தத்தை இழந்ததால் அவள் இறந்து போனாள்.
ரூபாலிபா என்ற அந்த இளம் பெண்ணின் தைரியத்தை
இன்றும் அந்தக் கிராமத்தினர் நினைவு கூருகின்றனர். ரூபாலிபாவையும்
கொள்ளைக்கூட்டதாருடன் சண்டையிட்ட அவளது வீரத்தையும் புகழும்
பாடல்கள் இன்றும் முழங்கி வருகின்றன.
Sunday, May 22, 2011
Subscribe to:
Posts (Atom)



