Powered By Blogger

Saturday, May 7, 2011

அண்ணா

காஞ்சிநகர் கல்வெட்டைக்
காலமழை அழிக்காது
கரும்புநிகர் சொல்வெட்டைக்
கவினுலகம் மறக்காது
கலை தந்த தலைமகனைக்
கன்னித்தாய் தமிழுக்கு
நிலை தந்த கலைமகனைப்
பிழையின்றிப் போற்றிடுவோம்
அண்ணா துயிலுமிடம்
அன்புதனைப்பயிலுமிடம்
அவன் நினைவே நிம்மதி
அண்ணனன்றோ நம்மதி.

No comments: