அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் ......
-கம்பன்
ஐம்பெரும்பூதங்களான வாயு, நீர் ,ஆகாயம், நெருப்பு, நிலம் என்பன.
அஞ்சிலே ஒன்றான வாயு பெற்ற மகனான அனுமன், அஞ்சிலே ஒன்றாகிய
கடலைத் தாவி, அஞ்சிலே ஒன்றான ஆகாய வழியாக, அஞ்சிலே ஒன்றாகிய
நிலம் பெற்ற சீதையை இலங்கையில் கண்டு அவ்வூரில் அஞ்சிலே
ஒன்றாகிய நெருப்பை வைத்தவன்.
No comments:
Post a Comment